வவுனியாவில் உள்ள கிராம அலுவலர் பிரிவுகளில் கிராமத்துக்கு மூன்று மில்லியன் ஒதுக்கப்பட்டதாக மக்களுடன் உரையாடல் நிகழ்வு நடாத்தப்பட்டு மக்களிடம் திட்ட முன்மொழிவுகள் ஆராயப்பட்ட போதும்.இதற்கு முரனான வகையில்
இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இருந்து ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவிற்கும் ரூ .4 மில்லியன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
மாவனல்லை பிரதேச உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போது, அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இருந்து ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் 100 இலட்சம் ரூபாவை அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக வழங்க தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டார்.
உள்ளாட்சி அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகளுக்கு தலா ரூ .3 மில்லியன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு முதல் கொரோனா தொற்றுநோய் காரணமாக நிறுத்தப்பட்ட கிராமப்புற வளர்ச்சிப் பணிகளை மீண்டும் தொடங்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது