இன்று இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை நாடு
இன்று இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது.
சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்துள்ளார்.நாட்டில் அதிகரித்து வரும் கொவிட் பரவல் நிலைமை காரணமாக இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.இந்த அறிவிப்புக்கு முன்னதாகவே வவுன்யாவில் சில அரச அதிகாரிகள் இதுவரை சரியான முறையில் கடமைக்கு சமூகம் அளிக்காம இருப்பது குறிப்பிடத்தக்கது.