பால்மாபிரச்சனை குறித்து அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடல்!!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பால்மா பிரச்சனை குறித்து நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
பால்மா இறக்குமதியின் போது இறக்குமதி நிறுவனங்களுக்கும் நுகர்வோருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்படுவது குறித்து இதன் போது கவனம் சொலுத்தப்பட்டுள்ளது இதற்கமைய பால்மா இறக்குமதியின் போது அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள சில வரிகளை குறைப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.