எல்லா செயல்களின் தொடக்கத்திலும் தீபம் ஏற்றப்பட்டே செயல்கள் ஆரம்பிக்கப்படுகின்றன.
தீபமானது (அகல் விளக்கு, காமாட்சி விளக்கு, குத்து விளக்கு, கிளியன் சட்டி) என பல வடிவங்களில் ஏற்றப்படுகிறது.
தீபமானது வீட்டில்( பூஜை அறை, சமையலறை, துளசி மாடம், முற்றம் போன்றவற்றிலும், கோவில்கள், தொழில் நிறுவனங்கள், கல்விகூடங்கள்) என எல்லா இடங்களிலும் ஏற்றப்படுகிறது.
இருப்பினும் விளக்கேற்றிய பிறகு சில விஷயங்களை க.ண்.டி.ப்.பா.க செய்யக்கூடாது. தற்போது அவை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
- காலை, மாலை விளக்கேற்றும் போது கொல்லைப் புறக் கதவைச் சாத்தி விட வேண்டும். விளக்கேற்றிய பிறகு தலை சீவக் கூ.டா.து.
- விளக்கேற்றிய பிறகு கூட்டக் கூ.டா.து. விளக்கேற்றிய உடன் சுமங்கலிப் பெண் வெளியே செல்லக் கூ.டா.து.
- விளக்கேற்றியவுடன் துணி துவைக்கக் கூ.டா.து. விளக்கேற்றி விட்டு உடன் தலை குளிக்கக் கூ.டா.து.
- வீட்டுக்கு தூரமான பெண்கள் மூன்று நாள்களும் விளக்கை ஏற்றவோ, தொடவோ கூ.டா.து.
- விளக்கேற்றும்போது, விளக்கிற்குப் பால், கல்கண்டு, நிவேதனம் வைத்து வழிபட எல்லா நன்மைகளும் கிட்டும்.
- விளக்கேற்றிய உடன் சாப்பிடக் கூ.டா.து. விளக்கேற்றும் நேரத்தில் உறங்க கூ.டா.து.
- விளக்கேற்றிய பிறகு (பால், மோர், உப்பு, தவிடு, சுண்ணாம்பு, அரிசி, கடன்) ஆகியவை கொடுக்கக் கூடாது.
- விளக்கு ஏற்றும் நேரம்: காலை 3.00 மணி முதல் 5.00 மணிக்குள் விளக்கேற்ற வேண்டும். அவ்வாறு செய்து வந்தால் சா்வ மங்களயோகத்தைத் தரும்.
- மாலை 6.00 மணி அளவில் வீட்டில் விளக்கேற்றி வழிபட (வேலை, நல்ல கணவன், குடும்ப சுகம், புத்திர சுகம்) ஆகியவை கிட்டும்.