Covid பரவலைக் கட்டுப்படுத்த ஆலய நிர்வாகத்தினர் உதவி கோரப்பட்டுள்ளது.மதிக்க தவறும் வவுனியா ஆலய நிர்வாகம்!!!
Covd.19 பரவல் நிலையை கட்டுப்படுத்த ஆலய நிர்வாகத்தினர் தங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று நடை பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்
கடந்த சில வாரங்களாக யாழ்பாண மாவட்டத்தில் ஆலயத் திருவிழாக்களில் பொதுமக்கள் ஒன்று கூடிய இடங்களில் covid பரவல் நிலை அதிகரித்துள்ளதாக தெரிவித்திருந்த போதும் வவுனியா கோவில் குளம் அகிலாண்டேஸ்வரி கோயிலில் தேர் உற்சவம் இன்று நடைபெறுவது குறிப்பிடத்தக்கது வவுனியாவில் covid பரவல் அதிகரிக்க இது வழிவகுக்குமா!!